கெப்லர் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ள நட்சத்திரங்கள் பலவும் பூமியிலிருந்து நூறு முதல் ஆயிரக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பவை என்பதால் இதுவரை மனிதர்கள் செல்லாத எல்லைவரை இந்த விண்வெளி தொலைநோக்கி படம் எடுத்து அனுப்பியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியைப் போன்ற கிரகங்களை அண்டச் சராசரத்தில் கண்டுபிடிப்பது என்பது சர்வ சாதாரணம் என்றாலும் வானியல் வல்லுநர்கள் இந்தக் கிரகங்களில் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
பூமியிலிருந்து 60 ஒளியாண்டுகள் தொலைவில் கிட்டத்தட்ட பூமியின் பருமனிலும் இருமடங்கு பருமனுள்ள கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கோளானது பி மென் சி எனப்படும் அதன் நட்சத்திரத்தை சுற்றிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே நாசாவால் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது உலகம் ஆகும்.
நாசாவால் அனுப்பப்பட்டுள்ள டிரான்ஸ்டிங் எக்சோப்லாநெட் செயற்கைகோள் (TESS) மூலமாகவே இந்தக் கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி விண்கலமானது 2 மாதங்களுக்கு முன்னரே அண்டைவெளியை ஆராயவென அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த கோளானது வெறும் 6.27 நாட்களில் அதன் நட்சத்திரத்தை சுற்றிவருவதாக தெரிவிக்கபட்டு உள்ளது.