Wednesday, September 26, 2018

பள்ளிகளில் கல்வி அதிகாரிகள் அதிரடி ஆய்வு

மார்த்தாண்டம், செப்.26: விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த அரசாணை கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



ஆனால் பல பள்ளிகள் ரகசியமாக சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றன. இதை பெற்றோரும் கண்டுகொள்வதில்லை.இந்த நிலையில் கடந்த 21ம் தேதி மொகரம் பண்டிகை விடுமுறை. 22ம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக அரசே விடுமுறை அறிவித்திருந்தது. 

23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. மேலும் 24ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் மாவட்டம் முழுவதும் பல பள்ளிகள் அந்நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தி உள்ளன.குறிப்பாக மொகரம் மற்றும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நாட்களில் பல பள்ளிகள் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வகுப்புகளை நடத்தின



Popular Feed

Recent Story

Featured News