Wednesday, September 26, 2018

இனி யாரும் தப்ப முடியாது! வழக்கு விசாரணைகள் இனி நேரடி ஒளிபரப்பு! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!




நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளின் விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பில்,அனைத்து நீதிமன்றங்களின் நிகழ்வுகளை நேரலை செய்யலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் வழக்குகள் விசாரணையை இனி நேரடி ஒளிபரப்பு செய்ய சம்மதம் தெரிவித்துள்ளது.வழக்கு விசாரணையை ஒளிபரப்ப போதுமான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.



Popular Feed

Recent Story

Featured News