Tuesday, October 9, 2018

சிறுபான்மை மாணவர்கள் கல்வி நிதியுதவி: அக்.15 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்ட சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் பள்ளி கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1-ஆம் வகுப்பு முதல் முனைவர் பட்டம் வரை பயிலும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சிறுபான்மையினரான கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி, ஜெயின் மதத்தைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் 2018-19 ஆம் ஆண்டிற்கு பள்ளிப் படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைக்கு (புதுப்பித்தல் மற்றும் புதியது) விண்ணப்பிக்க கடந்த செப்.30 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க வரும் 15-ஆம் தேதி வரையும், பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க வரும் 31 வரையும் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.



1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி படிப்பு மற்றும் 11, 12-ஆம் வகுப்புக்கான பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைக்கான (புதுப்பில் மற்றும் புதியது) விண்ணப்பங்களை ‌w‌w.‌s​c‌h‌o‌l​a‌r‌s‌h‌i‌p‌s.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயனடையலாம்.

Popular Feed

Recent Story

Featured News