Monday, October 29, 2018

சத்யா ஐஏஎஸ் அகாடமி சார்பில் தமிழக அளவில் நவ. 4-ல் குரூப் 2 இலவச மாதிரி தேர்வு (பத்திரிகை செய்தி)

நவம்பர் 11-ம் தேதி குரூப் 2 தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இலவச மாதிரித் தேர்வை சத்யா ஐஏஎஸ் அகாடமி வரும் 4-ம் தேதி நடத்துகிறது.





இதுதொடர்பாக சத்யா ஐஏஎஸ் அகாடமி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் காலியாக உள்ள நகராட்சி ஆணையர், சார் பதிவாளர், தணிக்கை ஆய்வாளர், போன்ற 1,199 முக்கிய பதவிகளை உள்ளடக்கிய குரூப் 2 பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நவம்பர் 11-ல் நடத்த உள்ளது.

அதில் பங்கேற்க உள்ளவர்களுக்கு உதவும் வகையில் இலவச மாதிரித் தேர்வை சத்யா ஐஏஎஸ் அகாடமி வரும் நவம்பர் 4-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் 12 மணி வரை தமிழகம் முழுவதும் நடத்த உள்ளது.



சென்னை, ஈரோடு, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலியில் ஒரே நேரத்தில் இத்தேர்வு நடத்தப்படு கிறது. தேர்வு முடிந்த 1 மணி நேரத்தில் தமிழக அளவிலான ஒட்டுமொத்த தரவரிசை பட்டியல், வகுப்பு வாரியாக தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.
இதில் கலந்துகொள்பவர்களுக்கு நடப்பு நிகழ்வுகள் அடங்கிய கையேடு இலவசமாக வழங்கப்படும். நவம்பர் 17-ல் தொடங்கும் குரூப் 2 மெயின் தேர்வுக்கான பயிற்சியில் சிறப்பு கட்டணச் சலுகையும் வழங்கப்பட உள்ளது.

இலவச மாதிரித் தேர்வில் பங்குபெற விரும்புவோர் தங்கள் குரூப் 2 விண்ணப்ப எண்ணுடன் இணையதளத்தில் (www.sathyaias.com) பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-26222360, 0424-4021939, 7401521948 என்ற எண் களை தொடர்பு கொள்ளலாம்.இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சென்னை, ஈரோடு, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலியில் ஒரே நேரத்தில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.



Popular Feed

Recent Story

Featured News