அரசுப் பள்ளியில் படித்த 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
டாக்டர் ராதாகிருஷ்ணன் நூற்றாண்டு அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகையாக ரூ. 90 ஆயிரம் மதிப்பிலான காசோலைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நூற்றாண்டு அறக்கட்டளையின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளியில் 10 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, அம்மாணவர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு மேல்படிப்புக்கான கல்வித்தொகையையும் இந்த அறக்கட்டளை வழங்கி வருகிறது
இந்நிலையில், 2017-2018 ஆம் கல்வியாண்டில் 10 -ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு, பள்ளி தலைமை ஆசிரியை டி.தெமினா கிரேனாப் தலைமை வகித்தார்.
இதில், ரோட்டரி முருகானந்தம், ரோட்டரி ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு 6 மாணவ, மாணவிகளுக்கு தலா 15 ஆயிரம் வீதம் ரூ. 90 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை கல்வி உதவித்தொகையாக வழங்கி வாழ்த்தினர்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் நூற்றாண்டு அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகையாக ரூ. 90 ஆயிரம் மதிப்பிலான காசோலைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, அம்மாணவர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு மேல்படிப்புக்கான கல்வித்தொகையையும் இந்த அறக்கட்டளை வழங்கி வருகிறது
இந்நிலையில், 2017-2018 ஆம் கல்வியாண்டில் 10 -ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு, பள்ளி தலைமை ஆசிரியை டி.தெமினா கிரேனாப் தலைமை வகித்தார்.
No comments:
Post a Comment