காற்றின் திசை மாறியதால் அந்த காற்றழுத்தம் மேலும் வலுப்பெற்று வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து சென்றது. அதனால் அது புயலாக மாறி மியான்மரில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தென் கிழக்கு திசையில் ஒரு காற்றழுத்தம் உருவாகி வட மேற்கு திசையில் நகர்ந்து சென்றது. இரண்டு காற்றழுத்தங்கள் எதிர் மறையான நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டதால் வடக்கு நோக்கி சென்ற புயல் தென் மேற்கு திசைக்கு இழுக்கப்பட்டது.
அப்போது இரண்டு காற்றழுத்தங்களும் ஒன்றாக இணைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டது.
இந்நிலையில், தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்தம் தற்போது உருவாகியுள்ளது. இது நாளை மேலும் வலுவடைந்து வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து வரும். 19ம் தேதி சென்னை அருகே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக 19ம் தேதி முதல் சென்னை மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கும்.
No comments:
Post a Comment