கடல் அரிமானத்தினால் தமிழகத்தின் 41 விழுக்காடு கடற்கரை அரிக்கப்பட்டு விட்டதாக தேசிய கடற்கரை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று (நவ-10) கடற்கரை ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது:
சென்னைக்கு அருகேயுள்ள மாமல்லபுரம்,புதுச்சேரிக்கு அருகிலுள்ள பொம்மையார்பாளையம் ஆகிய பாதிக்கப்பட்ட இடங்களில் கடற்கரையின் அரிமானத்தை மேலும் தடுக்க தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.
991.47 கி்.மீ தொலைவு உள்ள தமிழக கடற்கரையில் ஏறத்தாழ 407.05 கி.மீ பகுதி கடற்கரையில் அரிமானம் ஏற்பட்டுள்ளது.23 விழுக்காடு கடற்கரையில்தான் மணல் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment