Friday, November 9, 2018

அரசு பள்ளியில் இயங்கி வரும் நேர்மை அங்காடி!




புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள ஆவணத்தாங்கோட்டை- மேற்கு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான நேர்மை அங்காடி இயங்கி வருகின்றது.

இந்த அங்காடியில் மாணவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு ,விலைப்பட்டியலில் உள்ளபடி மாணவர்கள் அப்பொருளுக்கான தொகையை அருகில் உள்ள பணப்பெட்டியில் போட்டு விட்டு தாமாகவே சில்லறையும் எடுத்துச்செல்கின்றனர். 



இதன் மூலம் மாணவர்களிடம் நேர்மை பண்பும்,ஒழுக்கமும் வருகின்றது.இந்த அங்காடியில் மாணவர்களே உரிமையாளராகவும், நுகர்வோராகவும் இருக்கின்றனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News