Sunday, November 11, 2018

நாடகப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற பள்ளி நிர்வாகத்தினருக்குப் பாராட்டு

நாடகப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பள்ளிக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.



கல்வித்துறை சார்பில் பள்ளிகளின் மாணவர்கள் பங்குபெறும் நாடகப் போட்டி அண்மையில் காரைக்காலில் மாவட்ட அளவில் நடத்தப்பட்டது. சமூக நலன் சார்ந்த பல்வேறு தலைப்புகளில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர் போட்டியில் பங்கேற்றனர்.

காரைக்கால் வித்யோதயா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், தூய்மை இந்தியா திட்டத்தை முன்னிறுத்தி நாடகம் நடத்தினர். இதற்கு மாவட்ட அளவில் முதல் பரிசு கிடைத்தது. பரிசு பெற்ற நாடகக் குழுவினர் புதுச்சேரி மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.



மாநில அளவில் நடந்த போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றுத் திரும்பினர். மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தைப் பாராட்டும் வகையில், காரை கலைக்காவலர் கலைக்குழுத் தலைவர் ஏ.சூசைராஜ் தலைமையிலான குழுவினர் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை சென்றனர். சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் மாவட்ட பெற்றோர் சங்கத் தலைவர் L.S.P.சோழசிங்கராயர் கலந்துகொண்டார்.

பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் நாடகத்தில் பங்கேற்ற மாணவர்களை கலைக்குழுவினர் பாராட்டியதோடு, கலைக்கழு சார்பில் பள்ளி நிர்வாகத்துக்கு பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினர். நிகழ்ச்சியில் கலைக்கழு பொருளாளர் எஸ்.ஜான்கென்னடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News