Monday, November 5, 2018

தபால் நிலையங்கள் மூலம் பண பரிமாற்றம்.. மத்திய அரசின் புதிய திட்டம்!





டெல்லி: தபால் நிலையங்கள் மூலம் எளிதாக பணம் அனுப்ப உதவியாக மத்திய அரசு இந்திய போஸ்ட் பேமெண்ட் பேங்க் ( India Post Payments Bank - IPPB) என்ற வசதியை உருவாக்கி கொடுத்துள்ளது.


கடந்த 2018 செப்டம்பர் மாதம் இந்த வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது வரை இந்தியா முழுக்க 650 ஐபிபிபி கிளைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுக்க 1.5 தபால் நிலையங்கள், 3 லட்சம் தபால் பணியாளர்கள் இந்த பணியில் அமர்த்தப்பட இருக்கிறார்கள். இவர்கள் ஸ்மார்ட் போன்கள், டிஜிட்டல் கருவிகள் உதவியுடன் மக்களுக்கு பண பரிமாற்றத்தில் உதவ போகிறார்கள்.

ஐபிபிபியின் பயன்கள்:



பண பரிமாற்றம்

அரசு திட்டங்களை எளிதாக பெற முடியும்

கட்டணங்கள் எளிதாக செலுத்தலாம்

முதலீடு செய்ய முடியும்

இன்சூரன்ஸ் செய்ய உதவும்

ஐபிபிபி மூலம் சேவைகள் அனைத்தும் வீட்டிற்கே கொண்டு வரப்படும்.



ஐபிபிபி மூலம் மத்திய அரசின் பிரதான மந்திரி பசல் பீமா யோஜனா, பிரதான மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா ஆகிய திட்டங்களில் சேவைகளை எளிதாக பெற முடியும்.

3 தபால் பணியாளர்கள் மக்களுக்கு எளிதாக ஆசு சேவைகளை வழங்க உதவுவார்கள். எல்லா மக்களும், விவசாயிகளும், கிராம நடுத்தர குடும்பங்களும் இதனால் பயன் பெற முடியும். இன்னும் 3 மாதத்தில் இந்த வசதி 1.5 லட்சம் வங்கிகளில் உருவாக்கப்படும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News