செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வரிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை முன்வைத்தனர். அதில், வெற்றி சின்னம் ஆனா இரட்டை இலை சின்னம் துரோகிகளின் பிடியில் சிக்கியுள்ளதாக தினகரன் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதளித்த தமிழக முதல்வர், ''மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உழைப்பால் அந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் உருவாக்கப்பட்டார்கள், ஆனால் அவர்கள் இந்த ஆட்சிக்கும், அதிமுக கட்சிக்கும் துரோகம் செய்தார்கள். அவர்களுக்கு உண்டான தக்க தண்டனையை உயர்நீதிமன்றம் அளித்துள்ளது.
கடந்த தேர்தலின் பிரச்சாரத்தின் போது அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு ரேஷன் கார்டுகளுக்கும் இலவச செல்போன் என்ற திட்டம் அதிமுக வெற்றி பெற்று 3 வருடங்கள் ஆகியும் அமலுக்கு வரவில்லையே? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழக முதல்வர். ''இன்றைய தினம் அனைவரிடமும் செல்போன் உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தேர்தலின் போது இந்த இலவச செல்போன் திட்டத்தை அறிவித்தார். ஆனால் இங்கு இருபவர்களிடமும் சரி, ஊடக நண்பர்களிடமும் சரி அனைவரிடமும் செல்போன் உள்ளது.
No comments:
Post a Comment