பிரதிநிதித்துவப் படம்
வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவா கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கள் நேற்று கூறியதாவது:
இதன்மூலம் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை வலுப்பெறும். அதன் காரணமாக, தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் 6-ம் தேதி (இன்று) மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
7-ம் தேதி (நாளை) தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும். 7, 8 ஆகிய நாட்களில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.
சென்னையில்..
No comments:
Post a Comment