Tuesday, November 6, 2018

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தென் தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு




வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவா கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிரதிநிதித்துவப் படம்
வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவா கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கள் நேற்று கூறியதாவது:



தென்மேற்கு வங்கக் கடல், இலங்கை மற்றும் அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவு கிறது. தவிர, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் காணப்படு கிறது. இவற்றின் தாக்கத்தால், அதே பகுதியில் 6-ம் தேதி (இன்று) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேற்கு, வடமேற்காக நகர்ந்து இலங்கை, குமரிக் கடல் பகுதி களை 8-ம் தேதிக்குள் கடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

இதன்மூலம் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை வலுப்பெறும். அதன் காரணமாக, தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் 6-ம் தேதி (இன்று) மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

7-ம் தேதி (நாளை) தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும். 7, 8 ஆகிய நாட்களில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.

சென்னையில்..



சென்னை, புறநகர் பகுதி களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News