Sunday, November 11, 2018

பாடத் திட்டம் (நோட்ஸ் ஆப் லெசன்) எழுதாமல் வந்த ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்ட ஆப்பரேஷன் இ' ஆய்வு குழு

மதுரை பள்ளிகளில் நடந்த 'ஆப்பரேஷன்-இ' ஆய்வில் தீபாவளி கொண்டாடிய ஆசிரியர் பலர் பாடத் திட்டம் எழுதாமல் வந்தது தெரிந்தது*



நவ.,1 முதல் ரெகுலர் சி.இ.ஓ., பணியிடம் காலியாக உள்ளது*

மாவட்ட கல்வி அலுவலர் அமுதா சி.இ.ஓ., பொறுப்பு வகிக்கிறார்*

சி.இ.ஓ., இல்லாததால் 'ஆப்பரேஷன் இ' திட்டம், பள்ளி செயல்பாடுகள் சுணக்கமாக உள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது*

இதன் எதிரொலியாக நிறுத்தி வைக்கப்பட்ட 'ஆப்பரேஷன் இ' ஆய்வு, அமுதா தலைமையில் 10 குழுக்கள் தெற்கு கல்வி ஒன்றிய பள்ளிகளில் ஆய்வு நடத்தின

ஈ.வெ.ரா., பள்ளியில் தாமதமாக வந்த ஆசிரியர் சிலர் வருகை பதிவில் முன் நேரமிட்டு கையெழுத்திட்டது தெரிந்து எச்சரிக்கப்பட்டனர்*



உமறுபுலவர் பள்ளியில் மாணவர் கவனத்தை ஈர்த்து கணிதம் நடத்திய ஆசிரியர் பாராட்டப்பட்டார்*

தீபாவளி கொண்டாடிய ஆசிரியர் பலர், பாடத் திட்டம் (நோட்ஸ் ஆப் லெசன்) எழுதாமல் வந்தனர். அவர்களை குழு எச்சரித்து விளக்கம் கேட்டது*

அதிகாரி ஒருவர் கூறுகையில், "பெரும்பாலும் மாநகராட்சி பள்ளிகளில் ஆய்வு நடந்தது*

மாணவரின் கணிதம், ஆங்கிலம் வாசிப்பு திறன் குறைவாக இருந்தது
சுகாதாரமும் சிறப்பாக இல்லை. நவ.,க்குள் வாசிப்பு திறனை அதிகரிக்க ஆசிரியர் உறுதியளித்தனர்



மாநகராட்சி அதிகாரிகள் பள்ளிகளை அடிக்கடி கண்காணித்து குறைகளை சரி செய்ய வேண்டும்"என்றார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News