கடந்த 10 நாட்களுக்கு முன் தமிழகத்திற்கு வந்த கஜா புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாகை, புதுக்கோட்டை மாவட்டங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் அப்போது நடக்க இருந்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கபட்டன.
இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் எப்போது நடக்கும் என்பது பற்றி தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதாவது, காமராஜர் பல்கலைக்கழக தேர்வுகள் கடந்த 16-ம் தேதி கஜா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது; அதற்கான மறுதேர்வுகள் டிசம்பர் 5, 11, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என பல்கலை. தேர்வுத்துறை கட்டுபாடு அதிகாரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதேபோல, கஜா புயல் காரணமாக நவம்பர் 16-ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட அண்ணாமலை பல்கலை. தேர்வுகள் டிச.9-ம் தேதி நடைபெறும் என அண்ணாமலை பல்கலைகழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் எப்போது நடக்கும் என்பது பற்றி தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதேபோல, கஜா புயல் காரணமாக நவம்பர் 16-ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட அண்ணாமலை பல்கலை. தேர்வுகள் டிச.9-ம் தேதி நடைபெறும் என அண்ணாமலை பல்கலைகழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment