கஜா புயல் பாதிப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்ட பாலிடெக்னிக்குகளுக்கான டிப்ளமோ தேர்வுகள், மீண்டும் வேறு தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கஜா புயல் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பாலிடெக்னிக்குகளுக்கு கடந்த 15-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் வரும் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. இந்தத் தேர்வு வரும் 29-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதுபோல, கடந்த 16-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்தத் தேர்வு வரும் 27-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த 17-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் வரும் 23-ஆம் தேதி மாற்றப்பட்டிருந்தன. இதுவும் வரும் 30-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மற்ற தேர்வுகள் ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்ட நாள்களிலேயே நடைபெறும். அதாவது கடந்த 19-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வு ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்ட 26-ஆம் தேதியும், 20-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வு வரும் 28-ஆம் தேதியும் நடத்தப்படும்.
இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அதுபோல, கடந்த 16-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்தத் தேர்வு வரும் 27-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த 17-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் வரும் 23-ஆம் தேதி மாற்றப்பட்டிருந்தன. இதுவும் வரும் 30-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment