Sunday, November 18, 2018

கெயில் நிறுவனத்தில் முதுநிலை மேலாளர், சீனியர் அதிகாரி பணி

இந்திய எரிவாயு ஆணைய நிறுவனமான கெயில் நிறுவனத்தில் முதுநிலை மேலாளர், சீனியர் அதிகாரி போன்ற பணிகளுக்கு 55 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.



31 வயது முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.பி.எஸ்., எம்.எஸ்சி., படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.



21-11-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை http://gailonline.com/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம். மற்றொரு அறிவிப்பின்படி முதுநிலை மேலாளர், முதுநிலை அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு 38 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.



பட்டப்படிப்பு, சி.ஏ. படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 21-11-2018-ந் தேதி கடைசிநாளாகும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News