அகில இந்திய அளவில் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற சதுரங்கபோட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் மயிலாடுதுறை மேனகா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர் பிரகதீஷ் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.
மாணவர் பிரகதீசுக்கு சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 2 லட்சத்திற்கான காசோலை வழங்கி பாராட்டினார்.
பரிசு பெற்ற மாணவரை நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதா, மயிலாடுதுறை கல்வி மாவட்ட அலுவலர் குமரன், பள்ளி தாளாளர் பாண்டியன், நிர்வாக இயக்குனர் முரளி, முதல்வர் ரங்கராஜ் மற்றும் பலர் பாராட்டினர்.
பரிசு பெற்ற மாணவரை நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதா, மயிலாடுதுறை கல்வி மாவட்ட அலுவலர் குமரன், பள்ளி தாளாளர் பாண்டியன், நிர்வாக இயக்குனர் முரளி, முதல்வர் ரங்கராஜ் மற்றும் பலர் பாராட்டினர்.
No comments:
Post a Comment