Sunday, November 11, 2018

தேர்தல் பணிக்கு ஆசிரியர் பட்டியல் : பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

லோக்சபா தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்களின் பட்டியலை, அனுப்ப பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.



லோக்சபா தேர்தல் நடக்க இருப்பதையொட்டி, பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் விபரம், எண்ணிக்கை குறித்து விபரங்களை அனுப்ப, உடுமலை கல்வி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு சுற்றிக்கை விடப்பட்டுள்ளது

பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர்களும், தேர்தலின் போது, ஓட்டுச் சாவடி மைய அலுவலர், நிலை 1,2 அலுவலர்களாக பணியாற்றுகின்றனர். இதற்கான விபரங்கள் சேகரிக்க, கல்வித்துறையிலிருந்து ஆசிரியர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன

அனைத்து ஆசிரியர்களும் அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, கல்வி மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்



மேலும், நவ., மாதத்தில், ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு நகல் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்துள்ளதாக தலைமையாசிரியரின் கடித ஒப்புதலையும் சமர்ப்பிக்க வேண்டும் என, கல்வித்துறை அறிவித்துள்ளது

இதன்படி, உடுமலை கல்வி மாவட்ட பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் பள்ளி அளவிலான கூட்டம் நடத்தி, ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினர்



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News