பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சைனிக் பள்ளி தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் அமராவதிநகரில் உள்ளது.
இப்பள்ளியில் 6 முதல் 9 வகுப்புக்கான நுழைவுத் தேர்வுகளில் பங்கெடுக்க ஜூலை 31 ஆம் தேதிப்படி 10 முதல் 12 மற்றும் 13 முதல்15 வயதுடையவர்களாக இருக்க வேண்டும் என்பது விதிமுறை.
ஆனால் கடந்த செப்டம்பரில் வெளியான அறிவிப்பில் மார்ச் 31 ஆம் தேதிப்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதனால் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் பிறந்த மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்க இயலாத நிலை உருவாகும். இதனால் இந்த தேர்வுக்காக தயாராகும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
No comments:
Post a Comment