இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், தேவகோட்டை அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் திருடப்பட்டுள்ளதாக்க வெளியாகியுள்ள தகவல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு உதவி பெறும் நகரத்தார் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள அறை ஒன்றில் வினாத்தாள்கள் வைக்கப்பட்டு, அந்த அறை பூட்டப்பட்டு இருந்துள்ளது. இரவு அறைக்கதவின் பூட்டை உடைத்து 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு தமிழ், ஆங்கில பாடங்களின் முதல் மற்றும் இரண்டாம் வினாத்தாள்கள் மற்றும் 12ஆம் வகுப்பு தமிழ், ஆங்கிலம், கணக்கு, கணிணி அறிவியல் பாடங்களின் வினாத்தாள்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் திருடுபோகவில்லை, திட்டமிட்டபடி இன்று தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
No comments:
Post a Comment