Wednesday, December 12, 2018

பள்ளிகளில் மனித உரிமை கல்வி

புதுச்சேரி:பள்ளிகளில் மனித உரிமை கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என மக்கள் உரிமை கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.



இது குறித்து கூட்ட மைப்பு செயலாளர் சுகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திய அரசியல் சட்டத்திலும், பிற சட்டங் களிலும் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டியது அவசியம். புதுச்சேரியில் மனித உரிமைக் கல்வியை அறிமுகப் படுத்த பல்வேறு அமைப்புகள் சார்பில் அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. அரசுக்கு நிதி நெருக்கடி இருக்கும் பட்சத்தில் பாடப் புத்தகங்கள் அச்சிட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 



ஆனால், இதுவரையில் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என நான்கு பிரிவு பள்ளிகளிலும் மனித உரிமை கல்வியை முதல் கட்டமாக அறிமுகப்படுத்த வேண்டும். பின்னர் கல்லூரி அளவிலும் பட்டப்படிப்பு தொடங்கலாம்.புதுச்சேரியில் தமிழ்நாடு கல்வி வாரியத்தின் கீழ் தமிழ்நாடு பாடத் திட்டத்தைப் பின்பற்றுவதால் தனியே ஒரு பாடமாக சேர்த்து கற்பிப்பதில் எந்தவித சிக்கலும் இருக்காது. 



ஏற்கனவே தயாரிக்கப்பட்ட புத்தகங்களைத் தேவைப்பட்டால் கல்வியாளர்களைக் கொண்டு மேலும் செழுமைப்படுத்திக் கொள்ளலாம்.உலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு, புதுச்சேரி அரசு தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை, மனித உரிமைக் கல்வியை பாட மாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News