Thursday, January 10, 2019

வரும் கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ. மாணவர்களின் புத்தகச்சுமையை குறைக்க முடிவு!!!

புதுடெல்லி: மாணவ,மாணவியர் பாடப்புத்தகங்களின் சுமையின்றி சந்தோஷமாக பள்ளிக்கு சென்று வரவேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்து உள்ளது.
அதன் முதற்கட்டமாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் 2019-2020ம் கல்வியாண்டிலிருந்து சி.பி.எஸ்.இ. மாணவர்களின் பாடப்புத்தகச்சுமையை 10 முதல் 15% வரை குறைக்க முடிவு எடுத்துள்ளது.

1 முதல் 12-ம் வகுப்பு வரை தேவையில்லாத பாடப்பகுதிகள் குறைக்கப்படும், குறிப்பாக சமூக அறிவியல் பாடத்தில் அதிக அளவிலான பகுதிகள் நீக்கப்பட உள்ளது.

Popular Feed

Recent Story

Featured News