Tuesday, January 15, 2019

முதன்முறையாக சென்னையில்... டிராபிக் போலீஸ் ரோபோ அறிமுகம்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த டிராபிக் ரோபா போலீஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த ரோபோவை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ரோபோவை இன்று அறிமுகப்படுத்தியுள்ளார்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசலில் தினம் தினம் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். போக்குவரத்து காவலர்கள் இதனை சீர்படுத்தி வந்தாலும், இது கட்டுப்படுத்த முடியாத ஒன்றாகவே காணப்படுகிறது.






இந்நிலையில், சென்னையில் முதன்முறையாக, டிராபிக் போலீஸ் ரோபோ வலம் வர உள்ளது. சென்னையில், சாலை போக்குவரத்தை சீரமைத்தல், மாணவர்கள் சாலையை கடக்க உதவுவது உள்ளிட்ட பல பணிகளை இந்த ரோபோ மேற்கொள்ளவுள்ளது. இந்த டிராபிக் போலீஸ் ரோபோவை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ரோபோவை இன்று அறிமுகப்படுத்தியுள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News