Monday, January 14, 2019

UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் அதிகாரி பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 392 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 4-2-2019.

UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் அதிகாரி பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 392 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 4-2-2019.
இந்திய ராணுவ அகாடமிகளில் 392 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பிளஸ்-2 படித்தவர்கள் இதில் சேர விண்ணப்பிக்கலாம்.



இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் அதிகாரி பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிகளுக்கான தேர்வு (என்.டி.ஏ.&என்.ஏ.இ-1-2019) மூலம் இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள். மொத்தம் 392 பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது.இதில் தேசிய பாதுகாப்பு அகாடமியில் 342 பேரும் (தரைப்படை 208 பேர், கடற்படை - 42 பேர், விமானப்படை 92), இந்திய கடற்படை அகாடமியில் 50 பேரும் சேர்க்கப்படுகிறார்கள். பயிற்சியுடன் கூடிய இந்த அதிகாரி பணியிடங்களில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...



வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 2-7-2000, 1-7-2013 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :
தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ்-2 படித்திருக்க வேண்டும். கடற்படை அகாடமி மற்றும் விமானப்படையில் சேருபவர்கள் பள்ளிப்படிப்பில் இயற்பியல், கணிதம் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு, உளவியல் திறன் தேர்வு, நுண்ணறிவுத்திறன் தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பதாரர் உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம் :
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தவிர்த்த மற்றவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.



விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். பார்ட்-1 விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு கட்டணம் செலுத்திவிட்டு, பார்ட்-2 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள் :
ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 4-2-2019-ந் தேதியாகும். இதற்கான தேர்வு 21-4-2019-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.



கூடுதல் விவரங்களை பார்க்க www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Popular Feed

Recent Story

Featured News