Friday, February 1, 2019

கல்வி தரம் குறைய கல்விதுறை அதிகாரிகளே காரணம்: நீதிபதி

தமிழகத்தில் கல்வி தரம் குறைய கல்வித்துறை அதிகாரிகளே காரணம் என ஐகோர்ட் கிளை நீதிபதி கூறினார். ஆசிரியை வசந்தி என்பவர் தன்னுடைய தலைமை ஆசிரியை பதவி உயர்வை கல்வி அதிகாரி அங்கீகரிக்கவில்லைஎன கூறி வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். வழக்கில் கல்வி அலுவலருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவுஒன்றை பிறப்பித்துள்ளது.



அதில் நீதிபதி தெரிவித்திருப்பதாவது:

தலைமை ஆசிரியையின் பதவி உயர்வை அங்கீகரித்து 2 வாரங்களில் பணப்பலன்களை வழங்க வேண்டும். வழக்கில்தென்காசி மாவட்ட கல்விஅலுவலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. ரூ.10 ஆயிரம் அபராதத்தை தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு 10 நாட்களில் வழங்க வேண்டும். அபராதம் விதிக்கப்பட்டதை அலுவலரின் பணி பதிவேட்டில் பதிய வேண்டும். மேலும் இது போன்ற உத்தரவு தவறு செய்யும் அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும் என நீதிபதி உத்தரவிட்டார்.



Popular Feed

Recent Story

Featured News