Saturday, February 16, 2019

அரசு பள்ளி சீருடைகளில் அதிரடி மாற்றம்! - அமைச்சர் செங்கோட்டையன்





அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலானசீருடையை மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலானசீருடையை மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் சாவக்கட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையை பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

இதேபோல் மூணாம்பள்ளியில் வாடகை கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள திட்டமலை அரசு கல்லூரி பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியையும் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், அடுத்த கல்வியாண்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு 4செட் சீருடைகள் வழங்கப்படும் எனவும் 6 முதல் 8ம் வகுப்பு வரை சீருடையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Popular Feed

Recent Story

Featured News