Monday, February 18, 2019

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க அரசாணை வெளியிடப்படுமா? - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில்!


சென்னை கோட்டூர்புரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய விவரங்கள்:



அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க அரசாணை வெளியிடப்படுமா? என்ற கேள்விக்கு, நீதிமன்ற தீர்ப்பு விவரம் கிடைத்த பின் முடிவு செய்யப்படும். சிறப்பாசிரியர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தீர்ப்பு கிடைத்ததும் பணி ஆணை வழங்கப்படும்.



5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களிடப் கருத்து கேட்ட பின் முடிவு செய்யப்படும். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Popular Feed

Recent Story

Featured News