Monday, March 11, 2019

வரலாற்றில் இன்று 11.03.2019

மார்ச் 11 கிரிகோரியன் ஆண்டின் 70 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 71 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 295 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1702 – முதல் ஆங்கில நாளிதழான தெ டெய்லி குராண்ட் (The Daily Courant) லண்டனில் வெளியிடப்பட்டது.
1801 – ரஷ்யாவின் முதலாம் பவுல் கொல்லப்பட்டான். அவனது மகன் முதலாம் அலெக்சாண்டர் மன்னனானான்.


1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது.
1864 – இங்கிலாந்து ஷெஃபீல்ட் நகரில் இடம்பெற்ற செயற்கை வெள்ளப் பெருக்கினால் 250 பேர் கொல்லப்பட்டனர்.
1897 – மேற்கு வேர்ஜீனியாவுக்கு மேலாகப் பறந்த எரிவெள்ளி ஒன்று வெடித்து சிதறியதில் சேதம் ஏற்பட்டது.
1902 – காங்கேசன்துறையில் இருந்து சாவகச்சேரி வரையான 21 மைல் நீள புகையிரதப் பாதை அமைக்கப்பட்டது.
1905 – காங்கேசன்துறை முதல் மதவாச்சி வரை புகையிரதப் பாதை அமைக்கும் பணி முடிவடைந்தது.
1917 – முதலாம் உலகப் போர்: பக்தாத் ஜெனரல் ஸ்டான்லி மோட் தலைமையிலான ஆங்கிலோ-இந்தியப் படைகளிடம் வீழ்ந்தது.
1918 – ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறியது.
1931 – சோவியத் ஒன்றியத்தில் “வேலைக்கும் சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்கவும் ஆயத்தமாயிரு” என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.


1958 – ஐக்கிய அமெரிக்காவின் B-47 விமானம் அணுகுண்டு ஒன்றைத் தவறுதலாக வீழ்த்தியதில் தெற்குக் கரோலினாவில் பலர் காயமடைந்தனர்.
1978 – ஒன்பது பாலஸ்தீனத் தீவிரவாதிகள் இஸ்ரேலில் பேருந்து ஒன்றைக் கடத்தி 34 பொதுமக்களைக் கொன்றனர்.
1985 – மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் தலைவரானார்.
1990 – லித்துவேனியா சோவியத்திடம் இருந்து தன்னிச்சையாக விடுதலையை அறிவித்தது.
1998 – திருகோணமலைத் துறைமுகத்தில் கரும்புலிகள் இலங்கையின் ரோந்துப் படகொன்றை மூழ்கடித்தனர்.
2004 – ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் இடம்பெற்ற தொடர் தொடருந்துக் குண்டுவெடிப்பில் 192 பேர் கொல்லப்பட்டனார்.
2007 – தென் அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள கயானா விண்வெளி ஏவுதளத்தில் ஏரியன்-5 ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக அது இன்சாட்-4B என்ற இந்திய செய்மதியையும் ஸ்கைநெட்-5A என்ற பிரித்தானியாவின் துணைக்கோளையும் சுமந்து சென்றது.
2011 – 2011 செண்டை நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்: சப்பானின் ஒன்சூ தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 புள்ளிகள் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆழிப்பேரலையாக உருவெடுத்தது. பெரும் எண்ணிக்கையானோர் உயிரிழந்தனர்.



பிறப்புகள்

1863 – ஆன்ட்ரூ ஸ்டோடார்ட், ஆங்கிலேய்த் துடுப்பாட்ட வீரர் (இ. 1915)
1915 – விஜய் அசாரே, இந்தியத் துடுப்பாட்ட வீரர் (இ. 2004)
1922 – அப்துல் ரசாக் உசேன், மலேசியாவின் 2வது பிரதமர் (இ. 1976)
1931 – ரூப்பர்ட் மர்டாக், ஆத்திரேலிய-அமெரிக்கத் தொழிலதிபர்.
1952 – டக்ளஸ் ஆடம்ஸ், ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 2001)
1985 – அஜந்த மென்டிஸ், இலங்கைத் துடுப்பாட்ட வீரர்



இறப்புகள்

1863 – ஜேம்சு ஓற்றம், ஆங்கிலேய இராணுவ அதிகாரி (பி. 1803)
1955 – அலெக்சாண்டர் பிளெமிங், மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்ற இசுக்கொட்டியர் (பி. 1881)
1965 – ஹேரி அல்தாம், ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர் (பி. 1888)
1971 – பைலோ பார்ன்சுவர்த், அமெரிகக் கண்டுபிடிப்பாளர் (பி. 1906)
2009 – ஓமக்குச்சி நரசிம்மன், தமிழ்த் திரைப்பட நடிகர்
2013 – ஸ்ரீபாத பினாகபாணி, இந்தியப் பாடகர், மருத்துவர் (பி. 1913)
2013 – வே. தில்லைநாயகம், நூலகவியலாளர், தமிழறிஞர். (பி. 1925)



சிறப்பு நாள்

சாம்பியா – இளைஞர் நாள்

Popular Feed

Recent Story

Featured News