Monday, March 11, 2019

ஏப்ரல் 11-ல் தேர்தல் தொடக்கம்; தேர்தல் விதிமுறைகள் இன்றே அமல் - மேலும் விபரங்கள்



17வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்தியதலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் அறிவித்தார்.

பாஜக

இந்தியாவில் ஐந்து வருட மத்திய பாஜக ஆட்சி வரும் ஜூன் மாதம் 3-ம்தேதியுடன் நிறைவடையவுள்ளது. அதற்குள் நாடாளுமன்ற தேர்தல்நடத்தப்படவேண்டும். கடந்த சில மாதங்களாகத் தேசிய அளவில்நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன.

தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை அனைவரும்தங்களின் கூட்டணியை அறிவித்து, தொண்டர்களிடம் விருப்ப மனுக்கள்பெற்று நேர்காணல் வரை நடத்தி வருகின்றனர். சில கட்சிகள் தங்களின்வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடவுள்ள தொகுதிகள்போன்றவற்றையும் அறிவித்துவிட்டனர்.

காங்கிரஸ்

பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர்தற்போதிலிருந்தே தங்களின் தேர்தல் பிரசாரங்களைத் தொடங்கிவிட்டனர்.இந்திய கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்ற தேர்தலுக்காக மிகவும்தீவிரமாக தயாராகி வருகின்றன.



சுனில் அரோரா

இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 17-வது நாடாளுமன்றதேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் அறிவித்தார். அவர் பேசும் போது, “நாடுமுழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து விரிவானஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. அனைத்து மாநிலதலைமை தேர்தல் அதிகாரிகளுடம் ஆலோசனை நடத்தியுள்ளோம். மேலும்பல்வேறு துறைகளோடும் ஆலோசனை நடத்தி தேர்தலை சுமூகமாக நடத்தஏற்பாடுகள் செய்துள்ளோம்.

அனைத்து மாநிலங்களுக்கும் செங்கு அங்குதேர்தல் நிலை குறித்து ஆராய்ந்தோம். மாணாவர்களுக்கான தேர்வு,விழாக்கள், வானிலை போன்ற அனைத்து விஷயங்கள் குறித்தும் உள்துறைஅமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டது. வரும் தேர்தலில் 90 கோடி மக்கள் வாக்களிக்கவுள்ளனர். இந்த வருடம் புதிதாக 8.4 கோடிவாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
23 மாநிலங்களிலும் 100 சதவிகிதம் அனைவருக்கும் வாக்காளர் அடையாளஅட்டை வழங்கப்பட்டுள்ளது. வக்காளர் பட்டியல் மிகவும் சரியாக இருக்கவேண்டியது அவசியம் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.

அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்த முறையானசூழ்நிலை உள்ளதா என ஆராய்ந்த பிறகே இந்த அறிவிப்புவெளியிடப்படுகிறது. வாக்காளர் அட்டையை அடையாளமாக பயன்படுத்தமுடியாது. பிற 11 அட்டைகளை பயன்படுத்தலாம். கடந்த முறை 9 லட்சமாகஇருந்த ஓட்டு மையங்கள், இந்த முறை 10 லட்சமாக இருக்கும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இரவுபத்து மணி முதல் காலை 6 மணி வரை ஒலிப்பெருக்கிகள் வைக்க கூடாது.தேர்தலை மிகவும் அமைதியான முறையில் நடத்த மத்திய ரிசர்வ் பாதுகாப்புபடையினர் அனைத்து மாநிலங்களிலும் அதிகளவில் குவிக்கப்படவுள்ளனர்.

பூத் ஸ்லிப்கள் மூலம் வாக்களிக்க முடியாது. அனைத்து கட்டத்திலும் தேர்தல்நடவடிக்கை பார்வையாளர்கள் இருப்பார்கள். அனைத்து வாக்குசாவடிகளிலும் வாக்குகளை உறுதி செய்யும் கருவி பொறுத்தப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு PWD செயலி மூலம் தங்களுக்குத் தேவையானமுன்னேற்பாடுகளை செய்ய வழிவகை செய்துள்ளோம்.

17வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தேர்தல் ஏப்ரல் 11-ல் தொடங்குகிறது. மே 23-ம் தேதி அன்று வாக்குஎண்ணிக்கை வெளியிடப்படும்” என்றார்.

முதல் கட்ட தேர்தல் - ஏப்ரல் 11

2வது கட்ட தேர்தல் - ஏப்ரல் 18

3வது கட்ட தேர்தல் - ஏப்ரல் 23



4வது கட்ட தேர்தல் - ஏப்ரல் 29

5வது கட்ட தேர்தல் - மே 6

6வது கட்ட தேர்தல் - மே 12

7வது கட்ட தேர்தல் - மே 19

தமிழகத்தில் 2-வது கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி மக்களவைத் தேர்தல்நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா , தெலுங்கானா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல்நடைபெறும்.

ஏப்ரல் 11 , ஏப்ரல் 18, ஏப்ரல் 23, ஏப்ரல் 29, மே 6, மே 12,மே 19 ஆகிய ஏழு தேதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.வாக்குகள் மே 23ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றேவெளியிடப்படும். மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் தனியாகஅறிவிக்கப்படும்.

Popular Feed

Recent Story

Featured News