Saturday, March 16, 2019

வரலாற்றில் இன்று 16.03.2019

மார்ச் 16 கிரிகோரியன் ஆண்டின் 75 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 76 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 290 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 597 – பாபிலோனியர்கள் ஜெருசலேமைக் கைப்பற்றினர்.
1190 – சிலுவைப் படையினர் (Crusaders) யோர்க் நகரின் யூதர்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர். பல யூதர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
1521 – மகலன் பிலிப்பீன்சை அடைந்தான்.


1792 – சுவீடன் மன்னன் மூன்றாம் குஸ்டாவ் சுடப்பட்டான். இவன் மார்ச் 29 இல் இறந்தான்.
1926 – முதலாவது திரவ-எரிபொருளினால் உந்தும் ஏவுகணையை மசாசுசெட்சில் ராபர்ட் கொடார்ட் என்பவர் செலுத்தினார்.
1939 – பிராக் அரண்மனையில் இருந்து ஹிட்லர் பெஹேமியா, மொராவியாவை ஜேர்மனியின் ஒரு பகுதியாக அறிவித்தார்.
1942 – முதலாவது வி-2 ஏவுகணை ஏவப்பட்டது (ஏவப்பட்ட உடனேயே வெடித்துச் சிதறியது).
1945 – இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் 20-நிமிடக் குண்டுவீச்சில் ஜெர்மனியின் வூர்ஸ்பேர்க் நகரின் 90 விழுக்காடு அழிந்தது. 5,000 பேர் கொல்லப்பட்டனர்.
1962 – மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க விமானம் 107 பயணிகளுடன் காணாமல் போனது.
1963 – பாலியில் ஆகூங்க் மலை நெருப்பு கக்கி 11,000 பேர் வரை இறந்தனர்.
1966 – ஜெமினி 8, நாசாவின் 12வது மனிதரைக் கொண்டுசென்ற விண்கலம், ஏவப்பட்டது.


1968 – வியட்நாம் போர்: மை லாய் என்ற இடத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 350 முதல் 500 வரையிலான வியட்நாமியர்கள் அமெரிக்கப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1969 – வெனிசுவேலாவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 155 பேர் கொல்லப்பட்டனர்.
1985 – அசோசியேட்டட் பிரஸ் ஊடகவியலாளர் டெரி ஆன்டர்சன் பெய்ரூட் நகரில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் டிசம்பர் 4, 1991 இல் விடுதலை ஆனார்.
1988 – ஈராக்கில் குருதிய நகரான ஹலப்ஜாவில் நச்சு வாயுத் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
2006 – மனித உரிமைகளுக்கான ஐநா அமைப்பை உருவாக்குவதற்கு ஐநாவின் பொதுச்சபை ஆதரவாக வாக்களித்தது.



பிறப்புகள்

1751 – ஜார்ஜ் மாடிசன், ஐக்கிய அமெரிக்காவின் 4வது குடியரசுத் தலைவர் (இ. 1836)
1789 – கியோர்க் ஓம், ஜெர்மனிய இயற்பியலாளர் (இ. 1854)
1839 – ரெனே சளி-புரூடோம், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1907)
1918 – பிரெடெரிக் ரெயின்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1998)
1929 – இரா. திருமுருகன், தமிழறிஞர்
1953 – ரிச்சர்ட் ஸ்டால்மன், கட்டற்ற மென்பொருள் இயக்கம், க்னூ திட்டம் போன்றவற்றின் தோற்றுவிப்பாளர்.
1954 – அருண் விஜயராணி, ஈழத்து எழுத்தாளர் (இ. 2015)



இறப்புக்கள்

1914 – சார்ல்ஸ் கோபட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1843)
1935 – ஜோன் மாக்லியட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1876)
1940 – செல்மா லாகர்லோஃப், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1858)
1945 – எம். ஜே. லெகொக் அடிகளார், அருட்தந்தை (பி. 1880)
1989 – அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய கவிஞர். (பி. 1922
1998 – டெரெக் பார்ட்டன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1918)

Popular Feed

Recent Story

Featured News