Saturday, March 9, 2019

பிளஸ் 1 ஆங்கிலத் தேர்வு சற்று கடினமாக இருந்தது

பிளஸ் 1 ஆங்கிலத் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து கணிதம் உட்பட முக்கியப் பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் 12-ம் தேதி தொடங்குகிறது.



தமிழக பள்ளிக்கல்வியின் சமச்சீர் பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 6-ம் தேதி தொடங்கியது. முதல்நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வு எளிமையாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து ஆங்கிலப் பாடத்துக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும்உள்ள 2,914 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 659 பேர் எழுதினர்.



இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், புதியமுறைப்படி 90 மதிப்பெண்களுக்கு ஆங்கிலம் தேர்வுநடத்தப்படுவதால் அதிக எதிர்பார்ப்புஇருந்தது. இந்நிலையில் ஆங்கில வினாத்தாளில்பெரும்பாலான கேள்விகள் எளிதாக இருந்தன.ஒன்று மற்றும் 5 மதிப்பெண் பகுதியில் மட்டும் கடினமான வினாக்கள் கேட்கப்பட்டன. இலக்கணம் சார்ந்த கேள்விகளும் கடினமாக இருந்தது என மாணவர்கள், ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கணிதம், விலங்கியல் போன்ற முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் 12-ம் தேதி தொடங்குகிறது. ஒட்டுமொத்தமாக பிளஸ் 1 தேர்வு மார்ச் 22-ம் தேதி முடியவுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular Feed

Recent Story

Featured News