Sunday, March 31, 2019

வரலாற்றில் இன்று 31.03.2019

மார்ச் 31 கிரிகோரியன் ஆண்டின் 90 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 91 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 275 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1492 – ஸ்பெயினில் இருந்து அனைத்து 150,000 யூதர்களும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவை இசபெல்லா மாகாராணி பிறப்பித்தார்.
1866 – சிலியின் வல்பரைசோ துறைமுகம் ஸ்பானிய கடற்படையின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.
1885 – இலங்கையில் தமிழ், சிங்கள, இஸ்லாமிய வருடப் பிறப்பு நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டது.
1889 – ஈபெல் கோபுரம் தொடக்க விழா கொண்டாடப்பட்டது.


1909 – பொசுனியா எர்செகோவினா மீதான ஆஸ்திரியாவின் கட்டுப்பாட்டை சேர்பியா ஏற்றுக் கொண்டது.
1917 – ஐக்கிய அமெரிக்கா டானிஷ் மேற்கிந்தியத் தீவுகளை டென்மார்க்கிடம் இருந்து $25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குக் கொள்வனவு செய்து அமெரிக்க கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றியது.
1918 – ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1931 – நிக்கரகுவாவின் தலைநகரமான மனாகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் கிறிஸ்துமஸ் தீவை பிரித்தானியாவிடம் இருந்து கைப்பற்றியது.
1951 – யூனிவாக் 1 என்ற முதலாவது ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தகக் கணினி அந்நாட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நிறுவனத்துக்கு தரப்பட்டது.
1959 – திபெத்தின் 14வது தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, எல்லையைக் கடந்து இந்தியாவினுள் நுழைந்து அரசியல் தஞ்சம் கோரினார்.
1966 – சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இதுவே சந்திரனின் சுற்றுவட்டத்தை வலம் வந்த முதலாவது விண்கலமாகும்.
1970 – 12 ஆண்டுகள் விண்வெளியில் இருந்து விட்டு எக்ஸ்புளோரர் 1 புவியின் வளிமண்டலத்துள் வந்தது.
1979 – கடைசி பிரித்தானியப் படையினர் மோல்ட்டாவை விட்டு விலகினர். மோல்ட்டா விடுதலையை அறிவித்தது.
1990 – இந்திய அமைதிப் படை ஈழத்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது.


2004 – கூகிள் 1 ஜிகா பைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயிலை அறிவித்தது.
2007 – முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது.

பிறப்புக்கள்

1596 – ரேனே டெஸ்கார்ட்டஸ், தத்துவ ஞானி, கணித மேதை (இ. 1650)
1732 – ஜோசப் ஹேடன், மேற்கத்திய இசையறிஞர் (இ. 1809)
1890 – வில்லியம் பிராக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (இ. 1971)
1898-சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம், இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தவர் (இ. 1977)
1906 – Sin-Itiro Tomonaga, நோபல் பரிசு பெற்ற ஜப்பானியர் (இ. 1979)


1914 – ஒக்டாவியோ பாஸ், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (இ. 1998)
1928 – இராம.அரங்கண்ணல், தமிழக எழுத்தாளர், திரைப்படதயாரிப்பாளர்
1934 – கார்லோ ரூபியா, நோபல் பரிசு பெற்ற இத்தாலியர்

இறப்புக்கள்

1727 (ஜோர்ஜியன் நாட்காட்டியில்) – ஐசாக் நியூட்டன், அறிவியலாளர் (பி. 1643)
1861 – ஹென்றி மார்ட்டின், ஈழத்தின் தமிழ் எழுத்தாளர், ஓவியர், மதப் பிரசாரகர்.
1917 – எமில் பேஹ்ரிங், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1854)


1945 – ஹான்ஸ் ஃபீஷர், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1881)
2001 – கிளீஃபோர்ட் ஷல், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1915)

சிறப்பு நாள்

மால்ட்டா – விடுதலை நாள் (1979)

Popular Feed

Recent Story

Featured News