Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 29, 2019

வன விலங்குகளை புகைப்படம் எடுக்க பயிற்சி: ஏப். 3-க்குள் விண்ணப்பிக்கலாம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரும் ஏப்ரல் 6, 7-ஆம் தேதிகளில் வனவிலங்குகளைப் புகைப்படம் எடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வனவிலங்குகளை இனம் காண்பது, புகைப்படம் எடுப்பதில் உள்ள தொழில்நுட்பங்கள் குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாம் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அரங்கில் ஏப்ரல் 6, 7-ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற உள்ளது.


பயிற்சியில் கலந்து கொள்வோர் கேமரா, மடிக்கணினி கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். இதில், பங்கேற்க விரும்புவோர் www.aazp.in/workshop என்ற இணையதள முகவரியில் ஏப்ரல் 3-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.