Tuesday, March 19, 2019

எஸ்.சி / எஸ்.டி பிரிவுக்கான சலுகை பறிப்பு. உயர் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு


சென்னை: பொறியியல் படிப்பில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை உயர்த்தி உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. புதிய மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே 2019-2020 ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் புதிய விதிமுறைகளை முறைப்படுத்தி உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: பிசி, எம்பிசி, பிசி முஸ்லிம் ஆகிய பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 45-லிருந்து 40 ஆக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 50-லிருந்து 45 ஆக குறைக்கப்பட்டுள்ளது.


பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் என்ற திடீர் உத்தரவால், பொறியியல் படிப்புகளில் சேரும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் எண்ணிக்கை குறையும் என கூறப்படுகிறது.

Popular Feed

Recent Story

Featured News