Tuesday, March 12, 2019

தணிக்கை கணக்காளர் என்ற, சி.ஏ., தேர்வுகளுக்கான தேதி மாற்றம்

தேர்தல் காரணமாக, தணிக்கை கணக்காளர் என்ற, சி.ஏ., தேர்வுகளுக்கான தேதி மாற்றப்பட்டுஉள்ளது.

ஆடிட்டர் பணிக்கான, சி.ஏ., படிப்பில், இந்திய தணிக்கை கணக்காளர் அமைப்பான, ஐ.சி.ஏ.ஐ., சார்பில், தேசிய அளவில் தேர்வு நடத்தப்படுகிறது.



நடப்பு கல்வி ஆண்டிற்கான தேர்வை, மே, 2 முதல், மே, 17 வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், சி.ஏ., தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.

புதிய அட்டவணையின்படி, மே, 27 முதல், ஜூன், 12 வரை, சி.ஏ., தேர்வு நடக்கும் என, ஐ.சி.ஏ.ஐ., அமைப்பு அறிவித்துள்ளது.

Popular Feed

Recent Story

Featured News