தமிழக அரசின் வனத்துறையில் நிரப்பப்பட உள்ள 564 வனக்காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 564
பணி: வனக்காவலர்
காலியிடங்கள்: 465 + 99 (தோராயமாக)
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.forests.tn.gov.in என்னும் வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக்கட்டணம்: ரூ.150 மற்றும் உரிய சேவைக்கட்டணம். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், உடற்தகுதி மற்றும்உடற்திறன் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2019 ஜூன் நான்காவது வாரம் நடைபெறும்.
தேர்வுக்கான பாடத்திட்டம் வனத்துறையின் www.forests.tn.gov.in வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FW-2019/FW_Notifn-Tam_07032019.pdf என்ற கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.05.2019