தமிழகத்தில் செயல்பட்டு வரும் எந்த பள்ளிகளிலும் 8-ஆம் வகுப்பு வரை மாணவர்களை பெயில் ஆக்கும் தலைமை ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் வழங்க வேண்டும். இதனை மீறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும், 8-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளின் தேர்வு முறையில் மத்திய அரசு கொண்டுவர உள்ள சட்டத்தினை ஏற்கவும் தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.