Monday, April 8, 2019

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞானி திட்டத்தில் பயிற்சி

அரசு பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, இளம் மாணவர் விஞ்ஞானி திட்டத்தில், விரைவில் பயிற்சி முகாம் நடக்கவுள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறை, தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மாநில மன்றம் சார்பில், ஈரோடு மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு இளம் மாணவர் விஞ்ஞானி திட்டம் செயல்படுத்த உள்ளனர்.

இதில், 15 நாள் பயிற்சி முகாம், சித்தோடு பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் மே, 3 முதல், 17 வரை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். அறிவியல் துறையின் அவசியம், ஆராய்ச்சி மேற்கொள்ளும் அளவுக்கு, மாணவர்களை தயார்படுத்தும் வகையில், இப்பயிற்சி அமையும். ஒரு பள்ளிக்கு இரண்டு பேர் அனுமதிக்கப்படுவர். பங்கேற்க விரும்பும் மாணவர்களின் பட்டியலை, 25க்குள் வழங்க, கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News