Sunday, April 7, 2019

என்சிஆர்டிஇ படிப்பு: ஆசிரியர்களை தேர்வு செய்ய உத்தரவு

தேசிய கல்வியியல் ஆய்வு மற்றும்பயிற்சி நிறுவனத்தின் இணையவழி பட்டயப் படிப்பில் பயிற்சி பெற தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்ப தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ஏ.கருப்பசாமி அனுப்பிய சுற்றறிக்கையில்,



‘‘அனைத்துவித நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையான அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு கற்றல் தர நிலையை உயர்த்தும் பொருட்டு தேசிய கல்வியியல் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஆர்டிஇ) மூலமாக மே 1-ம் தேதி முதல் இணைய வழியில் பட்டயப் படிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


எனவே, அனைத்துவித நடு நிலைப் பள்ளிகளிலும் இதற்குத் தகுதியான ஆசிரியர்களின் விவரங்களை ஏப்ரல்15-ம் தேதிக்குள் தேசிய கல்வியியல் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனத் துக்கு அனுப்பி வைக்க வேண் டும். மேலும், இதுதொடர்பான அறிக்கையை deesection@gmial.com என்ற மின்னஞ்சல் முக வரிக்கு முதன்மை கல்வி அதி காரிகள் அனுப்ப வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News