Wednesday, June 5, 2019

அண்ணாமலைப் பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வருகிற 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் என்.கிருஷ்ணமோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


இந்தப் பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் பதிவு செய்வதற்கு முதல் கட்டமாக 31-05-2019 அன்று இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இணையதளம் மூலம் விண்ணப்பப் பதிவு செய்யும் தேதி 20-06-2019 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News