மத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்படும் பிலாஸ்பூரில் அமைந்துள்ள சௌத் ஈஸ்டர்ன் கோல் ஃபீல்ட்ஸ் லிமிடெட் (SECL) எனப்படும் நிலக்கரி நிறுவனத்தில் டிரேட் அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கு விண்ணப்பங்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. கம்யூட்டர் ஆப்ரேட்டர் அண்டு புரோகிராமிங் அசிஸ்டெண்ட், ஸ்டெனோகிராஃபர் (இந்தி / ஆங்கிலம்), எலக்ட்ரீசியன், ஃபிட்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இதில் அடங்கும்.
டிரேட் அப்ரண்டிஸ் பயிற்சி பணிகள்:
1. கம்யூட்டர் ஆப்ரேட்டர் அண்டு புரோகிராமிங் அசிஸ்டெண்ட் - 1,400
2. ஸ்டெனோகிராஃபர் (இந்தி / ஆங்கிலம்) - 100
3. எலக்ட்ரீசியன் - 1,600
4. ஃபிட்டர் - 1,500
5. வெல்டர் - 390
உள்ளிட்ட பல்வேறு பணிகள்
மொத்தம் = 5,500 காலியிடங்கள்
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 27.05.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.07.2019
வயது வரம்பு:
குறிப்பிட்ட சில பயிற்சிப் பணிகளுக்கு (Draughtsman, COPA, Stenographer மற்றும் Secretarial Assistant Trade) 16 வயதுக்கு குறையாமலும் , மற்ற பயிற்சிப்பணிகளுக்கு 18 வயதுக்கு மேலும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அத்துடன் பணி சார்ந்த ஐடிஐ சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், www.apprenticeship.gov.in - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்காலம்: ஒரு வருடம்
பயிற்சிக்கால மாத ஊக்கத்தொகை: ரூ.7,655.
மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, http://secl-cil.in/writereaddata/2741_ENG_YR27052019.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.