Sunday, June 2, 2019

புகையிலை பயன்பாட்டை தடுக்க பள்ளி, கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்!

பள்ளி, கல்லூரிகளில் புகையிலை பயன்பாட்டை தடுக்ககுழுஅமைத்து கண்காணிக்க வேண்டும் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.



பள்ளி, கல்லூரிகள் அருகே புகையிலை விற்கப்படுவதால், இளம் தலைமுறையினர் புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகும் சூழல் உள்ளது. இந்நிலையில், புகையிலை பயன்பாட்டை தடுக்கவும், அதனால் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை தடுக்கவும் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே புகையிலை பொருட்கள் விற்கபடுகிறதா என்பதை கண்டறியசுகாதாரத் துறைசென்னையில் 6 குழுவும், சென்னையை தவிர்த்து 42 சுகாதார மண்டலங்களில் 42 குழுக்களும் அமைத்துள்ளது.



மேலும், பள்ளி, கல்லூரிகளிலும் புகையிலை பயன்பாட்டை தடுக்க குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என பள்ளிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News