Saturday, June 1, 2019

நாளை நடைபெறுகிறது.. : 'ஜிப்மர்' மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு.!



புதுச்சேரி:

மருத்துவ படிப்புக்கான ஜிப்மர் நுழைவு தேர்வு நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிப்பிற்கான நுழைவு தேர்வு நாளை நடைபெற உள்ளது. நாடு முழுவதும்ட 132 நகரங்களில் நடைபெற உள்ளது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் 2019 ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் நுழைவு தேர்வு, நாளை காலை, மதியம் என இரண்டு வேளைகளாக நடைபெறவுள்ளது.

200 மருத்துவ படிப்பு இடங்களுக்கான நுழைவுத்தேர்வை எழுத 1 லட்சத்து 84 ஆயிரத்து 272 மாணவ மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர்.



இந்த தேர்வு நாளை காலை 10 மணி முதல் 12.30 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 5.30 மணி வரையும் நடக்கவுள்ளது.

தேர்வு மையத்துக்கு அரை மணி நேரம் முன்னதாக வர மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 25 மாநிலங்களில் 132 நகரங்களில் உள்ள 280 மையங்களில் இத்தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வு முடிவுகள் ஜூன் 21ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Popular Feed

Recent Story

Featured News