தமிழகத்தில் 2018ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனங்கள் விருது பெற வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக சுற்றுச்சூழல் துறை இயக்குனர் ஜெயந்தி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சுற்றுச்சூழல் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கப்படுகிறது.
அதன்படி, 2018ம் ஆண்டு தமிழகத்தில் சுற்றுச்சூழல் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனங்கள் விருது பெறுவதற்கான கால அளவு 15-4-2019 தேதியில் இருந்து 30.6.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை, தரைதளம், சுற்றுச்சூழல் துறை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.