சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருக்கோவிலூர் பொன்முடி (திமுக) பேசுகையில், 'உருது பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். இதற்கு பதிலளித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 'உருது பள்ளிகளில் ஆசிரியர் கள் பற்றாக்குறை உள்ளது.
அந்த பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுவரை பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலமாக 10 ஆயிரம் சம்பளத்தில் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.