Thursday, July 4, 2019

`வங்கித் தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம்!' - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு


பொ துத்துறை வங்கிப் பணிகளுக்கான தேர்வை, வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்) நடத்துகிறது. இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு பொதுவாக ஆங்கிலம் அல்லது இந்தி மொழிகளில் மட்டுமே கேள்விகள் கேட்கப்படும். இதனால் மற்ற மொழிகளில் பயின்றவர்களுக்கு அசெளகர்யமான சூழ்நிலையும் வங்கித் தேர்வை கையாள்வதில் சிக்கலும் இருந்து வந்தன.



இந்நிலையில், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யும் வகையில், கிராமப்புற வங்கி வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தவிர 13 பிராந்திய மொழிகளில் கேள்வித் தாள்கள் வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.



இது குறித்து மக்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன், "கிராமப்புற வங்கிப் பணிகளுக்கான தேர்வுகள் ஆங்கிலம், இந்தி தவிர தமிழ், தெலுங்கு, உருது, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், கொங்கணி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி ஆகிய 13 பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும். இதனால் வங்கித் தேர்வு எழுதுபவர்களுக்கு எளிமையாகவும் மற்றும் புரியும் விதமாகவும் இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News