அரசு பள்ளிகளில், ஹைடெக் ஆய்வகம் வேண்டாம்' என, உபகரணங்களை பெற, தலைமை ஆசிரியர்கள் மறுத்து விட்டதால், பள்ளி கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் நிலையை மாற்றும் வகையில், பல்வேறு புதிய திட்டங்களை அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் ஒரு திட்டமாக, அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும், ஹைடெக் ஆய்வகம் அமைக்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இதன்படி, பள்ளிகளில், நவீன வகை கணினிகள் பொருத்தி, நவீன தொழில்நுட்பத்தில் ஆய்வகம் அமைக்கப்படுகிறது. இந்த ஆய்வக பணிகளை, 6,029 பள்ளிகளில், லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனம், ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, பள்ளிகளில், நவீன வகை கணினிகள் பொருத்தி, நவீன தொழில்நுட்பத்தில் ஆய்வகம் அமைக்கப்படுகிறது. இந்த ஆய்வக பணிகளை, 6,029 பள்ளிகளில், லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனம், ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டுள்ளது.