Sunday, July 28, 2019

புதிய வினாத்தாள் மாதிரி வெளியிட வேண்டும்: தலைமையாசிரியர்கள் தீர்மானம்

தலைமையாசிரியர்கள் தீர்மானம் மதுரையில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க பொது குழுக் கூட்டம் தலைவர் தனபால் ஜெயராஜ் தலைமையில் நடந்தது.மாநில துணை தலைவர் முனியாண்டி, மாவட்ட துணை தலைவர் முத்தையா, முன்னாள் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர்.



பொருளாளர் தென்கரை முத்துப்பிள்ளை வரவேற்றார். காலியாக உள்ள டி.இ.ஓ., பணியிடங்களை நிரப்ப வேண்டும். தலைமையாசிரியருக்கும் லேப்டாப் வழங்க வேண்டும். ஒன்பது, பத்தாம் வகுப்புக்கான புதிய வினாத்தாள் மாதிரியை விரைவில் வெளியிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளராக செந்தில்குமார், துணை தலைவராக பிச்சைமணி, மகளிர் அணி தலைவியாக மணிமேகலை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Popular Feed

Recent Story

Featured News