Saturday, August 24, 2019

தேசியத் திறனாய்வுத் தேர்வு: செப். 7 வரை விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசியத் திறனாய்வுத் தேர்வுக்கு செப்.7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக அரசு தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில், அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், நவம்பர் 3-ஆம் தேதி நடக்கவுள்ள மாநில அளவிலான, முதல் கட்ட தேசியத் திறனாய்வு தேர்வில் பங்கேற்கலாம்.


இதற்கான விண்ணப்பங்களை, https://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 7 வரை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேர்வுக் கட்டணம் ரூ.50-ஐ சேர்த்து, பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை வரும் செப்டம்பர் 7-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கால அவகாசம் நீட்டிக்கப்படாது என அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News